கண்மாயில் இறந்து கிடந்த மான்


கண்மாயில் இறந்து கிடந்த மான்
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

திருவாடானை அருகே கண்மாயில் மான் இறந்து கிடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அருகே மாணவ நகரி கிராமத்தில் உள்ள கண்மாயில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து ஊராட்சி தலைவர் மாதவி கண்ணன், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. மேலும் மான் எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Next Story