கண்மாயில் இறந்து கிடந்த மான்

திருவாடானை அருகே கண்மாயில் மான் இறந்து கிடந்தது.
தொண்டி,
திருவாடானை அருகே மாணவ நகரி கிராமத்தில் உள்ள கண்மாயில் மான் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து ஊராட்சி தலைவர் மாதவி கண்ணன், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று இறந்த மானின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மானின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அப்பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. மேலும் மான் எப்படி இறந்தது என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





