பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி சாவு


பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி சாவு
x

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையம் ராஜீ நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (எ) சக்தி மணிகண்டன் (வயது 34). விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். கோட்டூர் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக பொள்ளாச்சியில் இருந்து ஆழியாறு நோக்கி சென்ற அரசு பஸ், சக்தி மணிகண்டன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், பஸ்சின் பின்புற சக்கரம் அவர்மீது ஏறி இறங்கியது. விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்தி மணிகண்டன் வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story