குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி சாவு


குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து விவசாயி சாவு
x

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). விவசாயி. திருமணம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான வயலில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம் கம்மாள பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது 55). விவசாயி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையில் இவர் பேசி வழக்கு தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கோதண்டனின் மகன் அவரை தீட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோதண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு பதிவு செய்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story