மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு


மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
x

மரத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சுத்தமல்லி சம்மன் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 70), விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை தனது ஆடுகளுக்கு தழை ஒடிப்பதற்கு வீட்டின் பின்புறம் உள்ள புளியமரத்தில் ஏறினார். அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த காசிநாதனை அவரது உறவினர்கள் மீட்டு சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காசிநாதன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story