முயலை வேட்டையாடிய தொழிலாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்


முயலை வேட்டையாடிய தொழிலாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
x

முயலை வேட்டையாடிய தொழிலாளிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் கிணறு வெட்டும் பணியில் ஆலத்தூர் அருகே உள்ள நக்கசேலம் கிராமத்தை சேர்ந்த சுக்கிரன் (வயது 51) என்பவர் ஈடுபட்டு வருகிறார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த முயலை சுக்கிரன் வேட்டையாடியுள்ளார். இதனை அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேப்பந்தட்டை வனச்சரக அலுவலர் சுதாகர், வனவர் ஆனந்தன் தலைமையிலான வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து சுக்கிரனை கைது செய்து அவரிடம் இருந்து இறந்த முயலை கைப்பற்றினர். பின்னர் சுக்கிரனுக்கு முயலை வேட்டையாடிய குற்றத்திற்காக ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூல் செய்தனர். மேலும் இனிவரும் காலங்களில் இது போன்று தவறுகளை செய்யக்கூடாது என்று எச்சரிக்கை செய்து, அவரை அனுப்பி வைத்தனர்.


Next Story