அந்தியூர் அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
அந்தியூர் அருகே கரும்பு காட்டில் தீ விபத்து
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் அருகே பெரியார் நகர் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் அங்குள்ள கரும்பு காட்டில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இகுறித்த தகவல் கிடைத்ததும் அந்தியூர் மற்றும் பவானி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ கொழுந்்துவிட்டு எரிந்ததால் ெதாடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story