குப்பையில் பற்றி எரிந்த தீ


குப்பையில் பற்றி எரிந்த தீ
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:49 PM GMT)

மானாமதுரையில் குப்பையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரையில் சிவகங்கை செல்லும் சாலையில் வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் குப்பைகளை சிலர் கொட்டுகின்றனர். இந்நிலையில் அந்த குப்பையில் திடீரென தீப்பிடித்ததால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

மானாமதுரை நகராட்சிக்கு சொந்தமான பகுதியில் உள்ள இறைச்சிகடைகள் மற்றும் ஓட்டல்களில், சேகரிக்கப்படும் குப்பைகளை சிலர் வைகை ஆற்றுக்குள் கொட்டுகின்றனர். அந்த குப்பைகள் அதிகளவில் குவியும்போது மர்ம நபர்கள் குப்பைக்கு தீ வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story