தைல மரக்காட்டில் தீ

தைல மரக்காட்டில் தீ ஏற்பட்டது.
கந்தர்வகோட்டை-செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் தாழைவாரி அருகில் தனி நபருக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து கந்தர்வகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது வாகனம் உள்ளே செல்ல முடியாததால் தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து இலை, தழைகளை வைத்து தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





