மனைவி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய மீன் வியாபாரி


மனைவி உள்பட 2 பேரை கத்தியால் குத்திய மீன் வியாபாரி
x

மனைவி உள்பட 2 பேரை மீன் வியாபாரி கத்தியால் குத்தினார்.

திருச்சி

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியை சேர்ந்தவர் முகமது கனி (வயது 49). மீன் வியாபாரி. இவரது மனைவி ஷர்மிளா பானு (40). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இந்த நிலையில் முகமது கனிக்கும் ஷர்மிளா பானுவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 4 ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் ஷர்மிளா பானு திருச்சி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜான்பாஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முகமது கனி, ஷர்மிளா பானுவை பார்க்க சுப்பிரமணியபுரம் வந்துள்ளார். அப்போது ஷர்மிளா பானு, தனது 2-வது கணவர் ஜான்பாஷாவுடன் இருந்ததை கண்டு ஆத்திரம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் முகமது கனி, அங்கிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து ஜான் பாஷா மற்றும் ஷர்மிளா பானுவை குத்தினார். இதில் அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் முகமது கனிக்கும் தலையில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story