நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்

நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பஸ்
வால்பாறை
வால்பாறை பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பஸ் லீப் உடைந்து சேடல்டேம் பகுதியில் நடுவழியில் நின்றது. இதனால் அடுத்த பஸ் வரும் வரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். எனவே அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





