மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்


மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
x
தினத்தந்தி 27 Jun 2023 7:32 PM GMT (Updated: 28 Jun 2023 12:20 PM GMT)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

கல்லக்குடி அருகே உள்ள வரகுப்பை கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 67).விவசாயி. இவரது மனைவி இந்திராணி (65). கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்தநிலையில் சின்னத்தம்பியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை இந்திராணி அடிக்கடி திட்டி உள்ளார். இதேபோல் நேற்று காலையில் இந்திராணி சின்னத்தம்பியை திட்டியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி மனைவியை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story