வாலாஜா அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி


வாலாஜா அருகே கிணற்றில் தவறி விழுந்து  தொழிலாளி பலி
x

வாலாஜா அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை

வாலாஜா

வாலாஜா அருகே கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அம்மூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ் (வயது 70). கூலி தொழிலாளியான இவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 25-ந்் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை இது குறித்து குடும்பத்தினர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.

இந்தநிலையில் அனந்தலை மேல்புதுப்பேட்டை பசும்பொன் நகரில் உள்ள விவசாய கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குப்புராஜ் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story