ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பலி


ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பலி
x

ஆழ்வார்குறிச்சியில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற தொழிலாளி தவறி விழுந்து பலியானார்.

தென்காசி

கடையம்:

ஆழ்வார்குறிச்சியை அடுத்த அழகப்பபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் ராஜீவ்காந்தி (வயது 37). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

ராஜீவ்காந்தி தினமும் காலையில் செங்கோட்டை- நெல்லை ரெயிலில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து வேலைக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம்போல் ராஜீவ்காந்தி வேலைக்கு புறப்பட்டு செல்வதற்காக ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையத்துக்கு சென்றார். அப்போது அங்கு ரெயில் புறப்பட்டதால் ராஜீவ்காந்தி ஓடிச் சென்று ரெயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்தார். இதில் ரெயிலின் சக்கரம் ஏறியதில் ராஜீவ்காந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் தென்காசி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story