வேடசந்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வேடசந்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2023 9:30 PM GMT (Updated: 20 Oct 2023 9:31 PM GMT)

வேடசந்தூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

வேடசந்தூரை அடுத்த ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 44). இவரது மனைவி சங்கீதா (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவன்-மனைவி 2 பேரும் விட்டல்நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளர்களான வேலை செய்து வந்தனர். இதற்காக அவர்கள் 2 பேரும் மில்லின் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருந்தனர். இந்தநிலையில் நேற்று விடுதி அறையில் யாரும் இல்லாதபோது சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சக தொழிலாளர்கள் வந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சங்கீதா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story