விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

கடலூர்


விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). இவரது மனைவி சுமதி (30). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதில் மனமுடைந்த சதீஷ்குமார் நேற்று விஷம் குடித்தார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story