கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
x

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த மோசஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மோசசை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையை ஏற்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார். அதன்படி மோசசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.


Next Story