குடிபோதையில் தவறி கீழே விழுந்த மேஸ்திரி சாவு


குடிபோதையில் தவறி கீழே விழுந்த மேஸ்திரி சாவு
x

சந்தவாசல் அருகே குடிபோதையில் தவறி கீழே விழுந்த மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் (வயது 42), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி மீனா (36). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

ராமன் சென்னையில் தங்கி கட்டிட மேஸ்திரி வேலை செய்து வந்தார். மீனாவும் அவருடன் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து ராமனும், மீனாவும் துரிஞ்சிக்குப்பம் கிராமத்துக்கு வந்தனர்.

ராமனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு ராமன் தனது நிலத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றார்.

பின்னர் குடிபோதையில் அவர் நடந்து சென்றபோது திடீரென தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சந்தவாசல் போலீசில் மீனா புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story