மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டிட மேஸ்திரி பலி
x
தினத்தந்தி 16 Dec 2022 1:00 AM IST (Updated: 16 Dec 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியது. இதில் கட்டிட மேஸ்திரி பலியானார். அவருடைய நண்பர் காயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி

பர்கூர்:-

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியது. இதில் கட்டிட மேஸ்திரி பலியானார். அவருடைய நண்பர் காயம் அடைந்தார்.

கட்டிட மேஸ்திரி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் குமார் (வயது 36), அவருடைய நண்பர் பிரபு (32). இவர்கள் இருவரும் கட்டிட மேஸ்திரிகள்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் தங்களுடைய உறவினரை பார்க்க கிருஷ்ணகிரி வந்துவிட்டு மீண்டும் வாணியம்பாடி நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

வாகனம் மோதி பலி

அப்போது கந்திகுப்பம் அருகே காரக்குப்பம் மேம்பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். படுகாயம் அடைந்த பிரபுவை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story