தீபாவளி பண்டிகை தொடர்பாக வரும் 28ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம்


தீபாவளி பண்டிகை தொடர்பாக வரும் 28ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம்
x

தீபாவளி பண்டிகை தொடர்பாக வரும் 28ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியாக கொண்டடுவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பட்டாசுகள் வெடிப்பதால் அதிக அளசு காற்று மாசுபாடு ஏற்படுவதாக கூறி பட்டாசுகள் வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள் குறித்து கட்டுப்பாடுகளை விதிக்க அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாடுகள், தடை செய்யப்பட்ட சீன பட்டாசு விற்பனையை கண்காணிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பட்டாசு விற்பனை சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிகிறது.


Next Story