பெருந்துறை அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை


பெருந்துறை அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை
x

பெருந்துறை அருகே விஷம் குடித்து வியாபாரி தற்கொலை

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறை சீனாபுரம் அருகே உள்ள தலையம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 40). இவர் பெருந்துறை - குன்னத்தூர் ரோடு சுள்ளிப்பாளையம் பிரிவில் மளிகை கடை மற்றும் இருசக்கர வாகன பழுது நீக்கும் பட்டறை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் சரிவர தொழிலை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை சரிகட்ட சீட்டு போட்டு ஏலம் எடுத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் மதுவுக்கு அடிமையான நடராஜன் சீட்டு தவணைகளை ஒழுங்காக கட்டாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த மாதம் 30-ந் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைப் பார்த்த அவருடைய மனைவி மவுனிஷா, உடனே கணவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு நடராஜனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story