திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம்


திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம்
x
தினத்தந்தி 7 March 2023 6:45 PM GMT (Updated: 7 March 2023 6:46 PM GMT)

மேல்மலையனூர் அருகே திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம் போலீசில் கணவர் புகார்

விழுப்புரம்

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அருகே தொண்டூரை அடுத்த அரியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் கண்ணதாசன்(வயது 25). விவசாயியான இவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த அர்ச்சனா(19) என்பவருக்கும் கடந்த 26.01.23 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவத்தன்று தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற அர்ச்சனா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணதாசன் மற்றும் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

பின்னர் இதுகுறித்து கண்ணதாசன் தன் மனைவியை அப்பம்பட்டை சேர்ந்த சூர்யா என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அரியநல்லூர் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story