புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது


புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது
x

புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் தவுட்டுப்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக திருச்சி மாவட்டம் வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது வந்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story