சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது


சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
x

சென்னையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கிண்டிவேலைவாய்ப்பு மையத்தில் நாளை நடக்கிறது.

சென்னை

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் கொ.வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில் 20-ந் தேதி (நாளை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த முகாம் நடக்க உள்ளது.

முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை. முகாமில் கலந்துகொள்ளும் வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவேற்றம் செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story