வாலிபருக்கு அரிவாள் வெட்டு


வாலிபருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 24 July 2023 6:45 PM GMT (Updated: 24 July 2023 6:45 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே, வாலிபருக்கு அரிவாள் வெட்டு

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே உள்ள, அதங்குடியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). அதே ஊரை சேர்ந்தவர் தினேஷ்ராஜ் (24). சம்பவத்தன்று இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்ராஜ், பிரகாசை திட்டி அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த பிரகாஷ் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் பிரகாஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தினேஷ்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story