தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு


தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு
x

தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி அருகே தங்கையை தாக்கியதை தட்டிக்கேட்ட தொழிலாளியை அரிவாளால் வெட்டிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கூலித்தொழிலாளி

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு சாலை தெருவை சேர்ந்த சிவானந்தம் மகன் தாமோதரன் (வயது28). கூலித்தொழிலாளி. இவரது தங்கை மர்சியா(22). அதே பகுதியை சேர்ந்த டிரைவர் சுந்தரபாண்டியன்(37) என்பவர் மர்சியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

தங்ைக மீது தாக்குதல்

நேற்று கட்டிமேட்டில் இவர்களுடைய உறவினர் ஒருவரது காதணி விழா நடைபெற்றது. விழாவிற்கு கணவன்-மனைவி சென்றுள்ளனர். அப்போது மர்சியாவின் குழந்தையை அவரது உறவினர்கள் கொஞ்சி அவரோடு பேசி கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுந்தரபாண்டியன் எனக்கு பிடிக்காதவர்களிடம் ஏன் பேசுகிறாய் என மர்சியாவை திட்டி தாக்கினார்.

இதனை பார்த்த மர்சியாவின் தந்தை சிவானந்தம் எனது மகளை ஏன் அடித்தீர்கள் என கேட்டுள்ளார். இதனால் சிவானந்தத்துக்கும், சுந்தரபாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது.

அரிவாள் வெட்டு

அப்போது அந்த வழியாக வந்த தாமோதரன் என் தங்கையை அடித்தது மட்டுமல்லாமல் என் தந்தையிடமும் தகராறு செய்கிறாயா என தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டியன் வீட்டில் இருந்த அரிவாளால் தாமோதரனை வெட்டினார்.

இதில் காயமடைந்த தாமோதரன் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்- இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரபாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கையை தாக்கியதை தட்டிக்கேட்ட தொழிலாளியை டிரைவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story