குரங்கு அம்மை நோய் சிகிச்சைக்கு சிறப்பு வார்டு

கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது
கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
குரங்கு அம்மை நோய்
ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்க போன்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. இதையொட்டி இந்தியாவில் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு மொத்தம் 20 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
புனே ஆய்வகம்
இது குறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
தமிழகத்தில் யாருக்கும் இதுவரை குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
இருப் பினும், முன்னெச்சரிக்கைக்காக, கோவை அரசு ஆஸ்பத்திரியில் அதிநவீன கருவிகளின் உதவியுடன் படுக்கைகள் வசதியுடன் வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். சந்தேகத்தின் அடிப்படையில் வரும் நோயா ளிகளிடம் இருந்து சளி, ரத்தமாதிரி எடுக்கப்பட்டு, புனே ஆய்வ கத்திற்கு அனுப்பப்படும்.
நோய் அறிகுறி
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்கு பரவுவதாக கூறப் படுகிறது. கொரோனாவை போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட் டவர்களிடம் இருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்க ளுக்கு பரவும் ஆபத்து உள்ளது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் இதன் அறிகுறிகளாகும்.
அந்த அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்னர் அவை கொப்பளங்களாக மாறும் என கண்டறியப்பட்டு உள்ளது.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு சிகிச்சை பெறலாம். குறிப்பாக இந்த நோய் பரவி வரும் நாடுகளில் இருந்து கோவை வந்தவர்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.






