வேகத்தடை அமைக்க வேண்டும்வாகன ஓட்டிகள் கோரிக்கை

வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:-
கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோவில் எதிரே மன்னார்குடி, சேந்தங்குடி, உச்சுவாடி, வடபாதிமங்கலம் பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கான சாலை என 4 பிரிவு சாலைகளாக அமைந்துள்ளன. இதில் மன்னார்குடி மற்றும் சேந்தங்குடி செல்லக்கூடிய சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். இந்த 4 பிரிவு சாலையின் முகப்பில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே வடபாதிமங்கலத்தில் உள்ள 4 பிரிவு சாலை முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





