பள்ளி விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி - மதுரையில் பரபரப்பு


பள்ளி விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி - மதுரையில் பரபரப்பு
x

மதுரையில் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த போது விடுதி மாடியில் இருந்து பள்ளி மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மதுரை,

மதுரை காமராஜர் சாலையில் அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு 3500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தின் உள்ளேயே மாணவிகளின் விடுதி இருக்கிறது.

ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜபாளையத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், இந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தேர்வு என்பதால் காலையில் விடுதியில் முதல் மாடிக்கு சென்று படித்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அங்கு இருந்த விடுதி வார்டன் மற்றும் ஆசிரியைகள் மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

இந்த நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் மாணவியை மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அலுவலர் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறினர். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story