தென்திருப்பேரை அருகே வாலிபர் தற்கொலை


தென்திருப்பேரை அருகே வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

தென்திருப்பேரை அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

தென்திருப்பேரை அருகே உள்ள மேலக்கடம்பா தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லிங்கம் (வயது 25). கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த ஊரில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. அப்போது இவர் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த லிங்கம் வீட்டின் முன்பிருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து குரும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று லிங்கம் உடலை கைப்பற்றி ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story