காதலுக்கு எதிர்ப்பு: அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணிப்பிப்பதாக பணம் வாங்கி பூச்சி மருந்து குடித்த வாலிபர் பலி


காதலுக்கு எதிர்ப்பு: அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணிப்பிப்பதாக பணம் வாங்கி பூச்சி மருந்து குடித்த வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 July 2022 12:01 PM GMT (Updated: 9 July 2022 12:01 PM GMT)

தர்மபுரி அருகே பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள ஆல்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் மேகன் (வயது 22). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த காதலுக்கு மேகனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க வேண்டும் என கூறி பெற்றோர்களிடமிருந்து ரூ.250 வாங்கிக் கொண்டு சென்றவர், அங்கு மதுபானத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மேகனின் தந்தை முருகன் (50) என்பவர் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீஸ்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story