விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x

விபத்தில் வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 24). இவர் திருக்கோகர்ணம் அருங்காட்சியகம் பகுதியில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். புதுத்தெரு அருகே சாலையோரம் கிடந்த கல்லில் ேமாட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story