மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் சாவு


மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் சாவு
x

மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் மேட்டுச்சேரியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் பூமாலை (வயது 26). விவசாயி. இவர் நேற்று மேட்டுச்சேரியில் இருந்து வி.களத்தூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே வி.களத்தூரில் இருந்து மேட்டுச்சேரி நோக்கி வண்ணாரம்பூண்டியை சேர்ந்த ராசாத்தி (43) என்பவர் மொபட்டில் வந்தார். ஏரிக்கரை அருகே வந்தபோது மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூமாலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராசாத்தி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பூமாலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story