மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
x

திருவண்ணாமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் என்பவரின் மகன் தீபன்சக்கரவர்த்தி (வயது 25), கார் டிரைவர்.

இவர் நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை நோக்கி அவலூர்பேட்டை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோட்டார்சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தீபன் சக்கரவர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story