கடலில் மூழ்கி வாலிபர் சாவு


கடலில் மூழ்கி வாலிபர் சாவு
x

குலசேகன்பட்டினத்தில் கடலில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கணேசபுரத்தைச் சேர்ந்த சேதுராஜன் மகன் கிருஷ்ணகுமார் (வயது 24). இவர், தனது நண்பர்களுடன் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமிதரிசனத்துக்கு வந்துள்ளார். அப்போது குலசேரன்பட்டினம் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார். இதில் திடீரென எழுந்த பெரிய அலையால் இழுத்து செல்லப்பட்ட அவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story