மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பலியானார்.

புதுக்கோட்டை

காரையூர்:

காரையூர் அருகே பெருமாநாடு கள்ளர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சேகர் (வயது 32). இவருக்கு திருமணம் நடந்து 8 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தனது மாமனார் ஊரான திருச்சியில் உள்ள கள்ளப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சூரப்பட்டி பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து சேகர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story