பேராசிரியர் வீட்டில் சைக்கிள் திருடிய வாலிபர் கைது


பேராசிரியர் வீட்டில் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
x

பேராசிரியர் வீட்டில் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனார்.

வேலூர்

வேலூர் கஸ்பா பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரவின் ராஜ் (வயது 44). இவர், தந்தை பெரியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டிற்குள் இருந்த ரூ.14 ஆயிரம் மதிப்பிலான சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், சைக்கிளை திருடியது வசந்தபுரம் பத்மாவதி தாயார் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் விக்னேஷ் (25) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்து, சைக்கிளை பறிமுதல் செய்தனர்.


Next Story