குன்றத்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது


குன்றத்தூர் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
x

குன்றத்தூர் அருகே கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

காஞ்சிபுரம்

குன்றத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மது விலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் தாம்பரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபரை பிடித்து விசாரித்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கவுரன் சரன் நேகாக் (வயது 20), என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சாவை எடுத்து வந்து குன்றத்தூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story