லாரி மோதி வாலிபர் பலி


லாரி மோதி வாலிபர் பலி
x

லாரி மோதி வாலிபர் பலியானார்.

மதுரை

வாடிப்பட்டி,

மதுரை காளவாசல் காளிமுத்துநகர் முத்துராமலிங்கதேவர் தெருவை சேர்ந்தவர் நாகசுப்பிரமணியன். இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது 31) இவர் ஸ்டூடியோவில் போட்டோகிராப்பராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 10 மாத பெண்குழந்தை உள்ளது. நேற்று சொந்தவேலை காரணமாக வாடிப்பட்டிக்கு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். சமயநல்லூர் அருகே கட்டப்புளிநகர் முன்பு வந்தபோது லாரியில் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சூரியபிரகாஷ்க்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து சமயநல்லுhர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story