ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது


ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 8:00 PM IST (Updated: 8 Sept 2023 8:00 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருத்தணி அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 48). இவர் புதிய பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகே சிக்கன் பக்கோடா விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பக்கோடா சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளார்.

மேலும் கத்தியை காட்டி நரசிம்மனுக்கு கொலை மிரட்டல் விடுத்து கடையில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து நரசிம்மன் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பாலீசார் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பவன் குமார் (வயது 24) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story