கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது


கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது
x

திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகரப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீசார் திருவண்ணாமலை டவுன் பகுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருவண்ணாமலை பாவாஜி நகர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் நான் ஊடகத்துறையை சேர்ந்தவன் என்று தெரிவித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் புதுச்சேரி மாநிலம் ஆலங்குப்பம் பகுதியை சேர்ந்த ஜீவரத்தினம் (வயது 35) என்பது தெரியவந்தது.

பின்னர் அவரை தனிப்பிரிவு போலீசார் திருவண்ணாமலை டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story