7 மாதம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

7 மாதம் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நாங்குநேரியில் கடந்த 2010-ம் ஆண்டு அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலை (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இதனையடுத்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் வானுமாமலைக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் நாங்குநேரி போலீசார் வானுமாமலையை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





