டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து - லாரிக்கு நடுவில் சிக்கிய டிரைவர்...!


டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து - லாரிக்கு நடுவில் சிக்கிய டிரைவர்...!
x

பெரிய முல்லைவாயலில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் லாரிக்கு நடுவில் சிக்கிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்,

வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் எண்ணூர் துறைமுகம் நோக்கி டேங்கர் லாரி ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தன. மீஞ்சூர் அருகே பெரிய முல்லைவாயல் பகுதியில் வந்து கொண்டிருந்ம போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த ஆயில் டேங்கர் லாரி மீது டிப்பர் லாரி பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.

இதில் டிப்பர் லாரியின் டிரைவர் சக்கரபாணி கால் நசுங்கி லாரியின் உள்ளே சிக்கிக்கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் கிரேன் வாகனத்தை வரவழைத்து இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஓட்டுநரும் கால் உள்ளே சிக்கிக் கொண்டதால் வெளியே எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து எடுத்த போலீசார் லாரியின் கேபினுக்குள் சிக்கி இருந்த டிரைவர் சக்கரபாணியை பத்திரமாக மீட்டனர்.

காலில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்த லாரி ஓட்டுநர் சக்கரபாணியை உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Next Story