மக்காச்சோள மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது


மக்காச்சோள மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது
x

மக்காச்சோள மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது.

பெரம்பலூர்

பாடாலூர்:

திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, மால்வாய் கிராமத்தில் இருந்து மக்காச்சோள மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் மாவட்டத்திற்கு நேற்று காலை புறப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம்-துறையூர் சாலையில் குரூர் பகுதியில் நேற்று மதியம் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மக்காச்சோள மூட்டைகள் சிதறி விழுந்து சேதமடைந்தன. லாரியின் டிரைவர் உள்ளிட்டோர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் விபத்துக்குள்ளான லாரி கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. மக்காச்சோள மூட்டைகள் மாற்று லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டன. இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story