தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் தீப்பிடித்தது


தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் தீப்பிடித்தது
x

தனியார் கம்பெனி ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் தீப்பிடித்து எரிந்தது.

சென்னை

சென்னை மாதவரம், காளியப்பா நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு வேனை போரூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை அழைத்துச் செல்ல இயக்கி வந்தார். அந்த வேனை கொளத்தூரை சேர்ந்த நரேஷ் (29) என்பவர் ஓட்டி வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் தனியார் கம்பெனியை சேர்ந்த 2 பெண் ஊழியர்கள் உள்பட 6 பேரை வேனில் ஏற்றிக்கொண்டு கொரட்டூர் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக வேனை நரேஷ் நிறுத்திவிட்டார். வேனில் இருந்த 2 பெண் ஊழியர்கள் உள்பட 6 பேர் கீழே இறங்கி விட்டனர். அதற்குள் வேன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், வேனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story