விபத்தில் பெண் பலி

விபத்தில் பெண் பலியானார்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய காலனியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி வேலம்மாள் (வயது 65). அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர்.
நேற்று முன்தினம் இவர் அருகில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றார். ரோட்டை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





