மாடியில் இருந்து விழுந்த ெதாழிலாளி சாவு;அதிர்ச்சியில் மனைவி தற்கொலை


மாடியில் இருந்து விழுந்த ெதாழிலாளி சாவு;அதிர்ச்சியில் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2023 12:15 AM IST (Updated: 19 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த கணவர் உயிரிழந்தார். இதனால் அவருடைய மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

ராமநாதபுரம்

வேலை செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்த கணவர் உயிரிழந்தார். இதனால் அவருடைய மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தவறி விழுந்தவர் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் கற்பூரம் என்ற சுதாகர் (வயது 36). இவருடைய மனைவி தாரணிகாமாட்சி (29). இவர்களுக்கு ஹர்ஷித் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. சுதாகர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பரமக்குடி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் ஜன்னலில் கொசுவலை அடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது முதல் மாடியிலிருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூக்குப்போட்டு பெண் தற்கொலை

இதனால் தாரணி காமாட்சி மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். உறவினர்களும் குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறினர். இந்தநிலையில் விபரீத முடிவெடுத்து தாரணி காமாட்சியும் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவருடைய குழந்தை பெற்றோரை இழந்து தவித்து வருகிறது.

கணவர் இறந்த மறுநாளே மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story