சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி சாவு

சமயபுரத்திற்கு பாதயாத்திரை சென்ற பெண் வாகனம் மோதி பலியானார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், வாராப்பூர் அருகே உள்ள பொன்னாங்கண்ணிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி ராஜகுமாரி (வயது 58). இவர் அப்பகுதியினருடன் சேர்ந்து சமயபுரம் கோவிலுக்கு மாலை அணிந்து நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு நடைபயணமாக சென்று கொண்டிருந்தார். இரவு 10 மணியளவில் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் மாத்தூர் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராஜகுமாரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த அவரை போலீசார் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story