குஜிலியம்பாறை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


குஜிலியம்பாறை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

குஜிலியம்பாறை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

குஜிலியம்பாறை அருகே உள்ள க.ஆனைப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 38). கூலித்தொழிலாளி. இன்று இவர், தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story