மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

நிலக்கோட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே மைக்கேல்பாளையம், சமத்துவபுரத்ைத சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 55). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். கருப்பாயி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் இறந்துபோனார். மனைவி இறந்துபோனதில் இருந்து விஜயகுமார் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி, இன்று சமத்துவபுரத்தில் உள்ள மரத்தில் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story