அய்யலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


அய்யலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

அய்யலூர் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல்

அய்யலூர் அருகே மூங்கில்கரடு என்ற காட்டுப்பகுதியில் நேற்று மாலை மரத்தில் ஆண் ஒருவர் கைலியால் தூக்குப்போட்டபடி பிணமாக தொங்கினார். மேலும் அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் அய்யலூர் அருகே உள்ள மாமரத்துப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான வேணுகோபால் (வயது 34) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி சத்யா (28) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற வேணுகோபால், அதன்பிறகு திரும்பி வரவில்லை. இதனால் தனது கணவரை சத்யா பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இந்தநிலையில் தான் மூங்கில்கரடு காட்டுப்பகுதிக்கு சென்ற வேணுகோபால் கைலியால் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சத்யா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story